Thursday, December 11, 2008

ரப்பரும் எரேசரும்

அமரிக்கா வந்த புதுசுல நம்ம ஆங்கிலப் புலமைய பத்தி தான் ஏற்கனவே சொல்லி இருக்கம்ல? அதோட ஒரு தொடர்ச்சி தான் இது.

முத வேலை எனக்கு ஒரு பேங்குல. நேரடியா ஒரு டைரக்டர்கிட்ட ரிப்போர்ட்டிங். முத வாரம் ஆபீசுல ஏதும் பேனா பென்சில் வேணும்னா, டைரக்டரோட அசிஸ்டண்ட்கிட்ட போய் கேட்டா தருவாங்கன்னு சொன்னாங்க. அந்த அசிஸ்டண்ட்டு முப்பத்து சொச்ச வயசுல அழகான ஒரு பொண்ணு.

இரண்டாவது வாரம் எனக்கு ஒரு பென்சில் அழிப்பான் (அதாங்க அழி ரப்பர்) தேவைப்பட்டது. நேரா அம்மணி கிட்ட போயி எனக்கு ஒரு ரப்பர் வேணும்னேன். கணினில ஏதோ டைப் பண்ணிகிட்டு இருந்த அம்மணி முகத்துல அதிர்ச்சி. பட்டுன்னு நிமிந்து என்ன வேணும்னு திரும்ப கேட்டாங்க. நானும் ரொம்பத் தெளிவா நிதானமா ரப்பர் வேணும்னேன். அடுத்து நடந்தது எனக்கு அதிர்ச்சி. அம்மணி ஒண்ணும் பேசாம வேகமா எந்திருச்சி டைரக்டர் ரூமுக்குள்ள போய் கதவ மூடிக்கிட்டாங்க. போன வேகத்த பார்த்தா ஏதோ கோபமா போற மாதிரி இருந்துச்சி. எனக்கொண்ணும் புரியல. என்னடா இது ஒரு அழி ரப்பர் கேட்டதுக்கு எதுக்கு கோபப்படணும்னு வந்து என் டெஸ்க்குல உட்கார்ந்துட்டேன்.

கொஞ்ச நேரத்துல போனுல டைரக்டர் என்னை அவர் ரூமுக்கு வரச் சொன்னார். போனா அம்மணி, டைரக்டர், ஹியூமன் ரிசோர்ஸ்ல இருந்து ஒரு பாட்டி எல்லாம் இருக்காங்க. அம்மணி மூஞ்சி அழுதாப்பல இருக்கு. என்ன கேட்டேன்னு எல்லாரும் என்னை திரும்ப திரும்ப கேட்டாங்க. நான் பென்சில வச்சி எழுதி காட்டி இதை அழிக்க ரப்பர் கேட்டேன்ன்னு சொன்னதும், எல்லாரும் ஓகோகோன்னு ஒரே சிரிப்பு. நாஞ் சொன்னேன் எங்கூருல எல்லாம் இத ரப்பர்ன்னு தான் சொல்லுவோம்ன்னேன். இப்ப திரும்ப எல்லாரும் சிரிச்சாங்க. அடுத்து அம்மணி எம்பக்கத்துல வந்து என்னை கட்டி பிடிச்சி ஸாரி டியர்ன்னு சொல்லி சிரிக்க ஆரம்பிச்சிடுச்சி.

என்னடா இது அம்மணப் பய ஊருல கோமணங் கட்டுனவன் பைத்தியாரங்கற மாதிரி எல்லோரும் சிரிக்கும் போது நாமளும் சிரிக்கணுமேன்னு சிரிச்சும் வச்சேன். அப்பறமா டைரக்டர் என்கிட்ட சொன்னது. நீ கேட்டதுக்கு இங்க பேரு எரேசர். ரப்பர்ன்னா ஆணுறைன்னு சொல்லி திரும்ப குமரி முத்து மாதிரி சிரிக்கிறார். எல்லாங் கெரகந்தேன்

16 comments:

நசரேயன் said...

யோசனை நல்லா இருக்கே

நாநா said...

மொத்து வாங்கி வேலை போகாம இருந்ததே பெரிய விசயம். இதுல "யோசனை நல்லா இருக்கே"ன்னு நக்கலு தானே?

:)

நாநா said...

தமிழு, நம்ம பொழப்பே இப்படி சிரிப்பா சிரிச்ச கத தாம்

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

யோசனை நல்லா இருக்கே

//
உடனே செயல்படுத்துங்க

ரவி said...

///அந்த அசிஸ்டண்ட்டு முப்பத்து சொச்ச வயசுல அழகான ஒரு பொண்ணு.///

முப்பது வயசு ? பொண்ணு ? ஓக்கே !!!

லாஸ்ட் ட்விஸ்ட் சூப்பர் !!!!!!

கபீஷ் said...

நல்லா எழுதியிருக்கீங்க!!!!
:-):-):-)

நாநா said...

//முப்பது வயசு ? பொண்ணு ? ஓக்கே !!!//

ஆத்தி எங்கூருப்பக்கம் கலியாணமாகலீன்னா அவகள அக்கான்னோ இல்லே பொண்ணுன்னோ தான் சொல்லுறது வழக்கம். இதுல ஏதும் மேட்டரு இருக்கா?

நாநா said...

கபீஷ், நீங்க சொன்னா சரிதேம்

http://urupudaathathu.blogspot.com/ said...

ஹா ஹா ஹா

http://urupudaathathu.blogspot.com/ said...

//அடுத்து அம்மணி எம்பக்கத்துல வந்து என்னை கட்டி பிடிச்சி ஸாரி டியர்ன்னு சொல்லி சிரிக்க ஆரம்பிச்சிடுச்சி.//

கட்டிபுடிக்க ஐடியா கொடுத்த அண்ணன் நா நா வாழ்க வளர்க

http://urupudaathathu.blogspot.com/ said...

///ரப்பர்ன்னா ஆணுறைன்னு சொல்லி ///

ச்சீ உவ்வே .......

Anonymous said...

ஹஹஹ, நசரே்யன் என்னான்ன அவர் வாங்கின மார்க் அப்படியே போடறார், நீங்க இப்படி, இன்னிக்கு நல்லா ஆனந்தமா போகுது போங்க

Sundar Padmanaban said...

கலக்கல்! மத்த “அனுபவங்களையும்“ தொடர்ந்து எழுதுங்க!

பாராட்டுகள்.

நாநா said...

சுந்தர், முந்தைய அனுபவங்களை படிக்கலையா நீங்க?

நாநா said...

அனிமா....

ஒண்ணுமே தெரியாதது மாதிரி பிலிமி காட்டுறீங்களே?

குடுகுடுப்பை said...

நாநா said...

சுந்தர், முந்தைய அனுபவங்களை படிக்கலையா நீங்க?

//

இன்னும் எழுத சொல்லிருக்காருடா டுபுக்கு, அதுக்காக படிக்கலன்னு ஆயிடுமா?