டெல்லில இருக்க ராஷ்டிரபதி பவன் சுவத்துல ஒரு சின்ன ரிப்பேர் வேலை. சரின்னு மூணு காண்ட்ராக்டர கூப்பிட்டு வேலைய முடிக்க எவ்ளோ ஆகும்னு கேட்டாங்க.
முதல்ல வந்தது உ.பி காண்ட்ராக்டர். அவர் வந்து சுவத்துல இருக்க டேமேஜ பாத்தாரு. டேப் வச்சி அளந்தாரு. ஏதேதோ கணக்கு போட்டாரு. கடைசியா 6000 ரூபாய் சிமெண்ட், கல்லு, மத்த சாமனுக்கு. 3000 ரூபாய் வேலை ஆளுகளுக்கு. 1000 ரூபாய் லாபம் எனக்கு. ஆக மொத்தம்10,000 ரூபாய் ஆகும்ன்னாரு.
அடுத்து வந்தது ஆந்திரா காண்ட்ராக்டர். அதே போல சுவத்துல இருக்க டேமேஜ பாத்தாரு. டேப் வச்சி அளந்தாரு. ஏதேதோ கணக்கு போட்டாரு. கடைசியா 5000 ரூபாய் சிமெண்ட், கல்லு, மத்த சாமனுக்கு. 2000 ரூபாய் வேலை ஆளுகளுக்கு. 1000 ரூபாய் லாபம் எனக்கு. ஆக மொத்தம் 8,000 ரூபாய் ஆகும்ன்னாரு.
கடைசியா வந்தது பீகாரி. நடந்ததெல்லாம் பார்த்துக்கிட்டே இருந்தவர் அளக்கல, கணக்கு போடல. நேரா இன்சார்ஜ் ஆபீசர் கிட்ட போனார். கிசுகிசு குரல்ல "38,000 ரூபாய்"ன்னார்.
ஆபீசருக்கு அதிர்ச்சி. "என்ன பைத்தியமா உனக்கு? அவங்க ரெண்டு பேரும் 10,000 இல்ல 8000 ரூபாய்க்கு வேலை முடிக்கிறேன்னு சொன்னா நீ மட்டும் 38,000 ரூபாய்ங்கிறேயே?"
"10,000 உங்களுக்கு. 10,000 எனக்கு. 10,000 லல்லுக்கு. மிச்சம் 8000 ரூபாய்க்கு ஆந்திராகாரர இந்த வேலைய முடிக்க சொல்லிடலாம். என்ன சொல்றீங்க?"ன்னார் பீகாரி.
யாருக்கு அந்த காண்ட்ராக்ட் கெடச்சதுன்னு இப்ப உங்களுக்கு ஏதாச்சும் சந்தேகமா?
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
is this outsourcing?
30000 மும் எனக்கே கெடக்கிற மாதிரி ஏதாவது பண்ண முடியுமா?
Post a Comment